- தனுஷ்
- சென்னை
- பொங்கல் திருவிழா
- செந்தில் தியாகராஜன்
- அருண் தியாகராஜன்
- சத்யஜோதி பிலிம்ஸ்
- அருண் மாதேஸ்வரன்
- பிரியங்கா மோகன்
- சிவராஜ் குமார்
- சந்தீப் கிஷன்
- கொலிவுட் செய்திகள்
- கொலிவுட் படங்கள்
சென்னை: தனுஷ் நடித்துள்ள ‘கேப்டன் மில்லர்’ படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற 12ம் தேதி வெளிவருகிறது. சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் செந்தில் தியாகராஜன், அருண் தியாகராஜன் தயாரித்துள்ளனர். அருண் மாதேஸ்வரன் இயக்கி உள்ளார். பிரியங்கா மோகன், சிவராஜ்குமார், சந்தீப் கிஷன் உள்பட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்துள்ளார். படத்தின் முன் வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடந்தது. விழாவில் தனுஷ் பேசியதாவது:
சிறு துளி பெரு வெள்ளம் என்பார்கள். நான் சிறு துளிகளாக சேர்த்த எனது ரசிகர்கள் இங்கு பெரு வெள்ளமாக திரண்டிருக்கிறார்கள். நான் வரும்போது பெரும் கோஷம் எழுப்பினர்கள். இந்த ஒரு நொடிக்காகத்தான் இத்தனை போராட்டம், இத்தனை உழைப்பு. ‘கேப்டன் மில்லர்’ படம் வலியுறுத்துவது ஒருவனுக்கு தேவை சுந்திரம், மரியாதை. அது கிடைக்காவிட்டால் அதற்கான போராட்டம் நடக்கும் என்பதுதான்.
ஆனால் இந்த இரண்டும் இப்போது இல்லை. எது செய்தாலும், எது பேசினாலும் குறை சொல்ல ஒரு கூட்டம் இருந்து கொண்டே இருக்கிறது. அது சிறு கூட்டம்தான். ஆனால் அது செய்வது சுதந்திர துஷ்பிரயோகம். அவன் அதை செய்வதா? இவன் இதை செய்வதா? அதை பேசுவதா, இதை பேசுதா என்று சொல்கிறார்கள். எல்லாவற்றுக்கும் மேல் இறைவன் இருக்கிறான். அவன் பார்த்துக் கொள்வான். எதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பது எனக்குத் தெரியும். எண்ணம்போல்தான் வாழ்க்கை. இவ்வாறு தனுஷ் பேசினார்.
The post எது செய்தாலும் குறை சொல்றாங்க: தனுஷ் வருத்தம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.